பாரபட்சம் எதிர்த்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது,
BSNL நிர்வாகம் வெறும் 3000 ITS அதிகாரிகளை குஷால் படுத்த வேண்டி,
BSNL -க்கு option கொடுக்க அவர்களை கெஞ்சி காலில் விழுந்துவிட்டது.
BSNL -க்கு பொருளாதார நெருக்கடி என்று கூவிக்கூவி அழுதுவிட்டு,
BSNL -ஊழியர்களுக்கு வழங்கிவந்த பல allowance -களை நிர்வாகம்
பறித்து விட்டது. போனஸ், மருத்துவபடி, LTC போன்ற சலுகைகள்.
போராட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட நம்பூதிரி சங்கத்தையும்
போராட விடாமல் அவர்களை மூலையில் போட்டு முடமாக்கிவிட்டது.
ஆனால், திடீரென்று BSNL -நிர்வாகம், வெறும் 3000 ITS அதிகாரிகளுக்காக
பல புதிய சலுகைகளை, ரூ 1300/- கோடிவரை, இவர்களின் OPTION -காக
கொடுக்க தயாராக உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இது மாபெறும்
துரோகம் ஆகும்.
ஆகவே, அனைத்து தொழிற்சங்களும், ஒரு கூட்டு போராட்டத்தை துவங்க
முடிவு செய்துள்ளது.
1. 31-05-2012 அன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்,
2. 06-06-2012 அன்று மாபெறும் தர்ணா
3. 13-06-2012 அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
ஆகவே, இந்தியா முழுவதும் பாரபட்சம் களைய மாபெறும்
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்.
ஒரு சில ITS -அதிகாரிகளின் தயவை நாடி, காலில் விழுந்த நிர்வாகம்,
BSNL -லின் 3 லட்சம் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான
78.2 % IDA, 5 கட்ட பதவி உயர்வு, SC/ST பதவி உயர்வு ஒதுக்கீடு.,, என
தொடர்ந்து தர மறுத்து ஊழியர்களின் வயிற்றில் அடித்ததை
அனுமதியோம். நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்ட ஒன்றுபட்ட
போராட்டம் மூலம் புரிய வைப்போம்.
No comments:
Post a Comment